INDvsENG: இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியின் சிறப்பு கணங்கள்

Tue, 07 Sep 2021-3:18 pm,

இந்திய கேப்டன் விராட் கோலி தனது தலைமையில் அணியை, பேட்டிங் தரப்பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வந்துவிட்டார். இதற்காக அணியினரை பாராட்டிய விராட், "இந்திய கேப்டனாக நான் பார்த்த அற்புதமான மூன்று பந்துவீச்சு போட்டிகளில் இதுவும் ஒன்று" என்று பரிசளிப்பு விழாவில் கோலி கூறினார்.

(புகைப்படம்: AFP)

இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா 127 ரன்கள் எடுத்தார், இது அவர் வெளிநாட்டு எடுத்த முதல் டெஸ்ட் சதமாகும். அவரது சிறப்பான ஆட்டத்தால், அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

"அந்த சதம் சிறப்பானது. இரண்டாவது இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும். இது எனது முதல் வெளிநாட்டு சதம். அணியை ஒரு முக்கியமான நிலைக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ரோஹித் கூறினார்.

(புகைப்படம்: AFP)

போட்டியின் தோல்விக்கு பிறகு தனது ஏமாற்றத்தை மறைக்க முடியாத இங்கிலாந்து கேப்டன், "இன்று விளையாட்டில் இருந்து எதையும் பெற முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது" என்றார்.

இந்தியாவின் வெற்றிக்கு காரணமான இந்திய பந்துவீச்சாளர்களையும் அவர் பாராட்டத் தவறவில்லை.  

(புகைப்படம்: AFP)

ஓவல் டிராக் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இல்லை, ஆனால் ஜஸ்பிரித் பும்ரா உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இங்கிலாந்தை 210 ரன்களுக்கு அவுட்டாக்குவதில் பங்களித்தனர். இவர்கள் 7 விக்கெட்டுகளைப் பறித்து, 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தனர்.

(புகைப்படம்: AFP)

கோஹ்லியைப் பொறுத்தவரை, ஷர்துல் தாக்கூரின் ஆல்-ரவுண்ட் செயல்திறனும் அவரது அணியின் உறுதியான வெற்றியில் முக்கியமானது.

"இந்த விளையாட்டில் ஷர்துல் செய்திருப்பது தனித்து நிற்கிறது. அவரது இரண்டு அரைசதங்கள் எதிரணியை வீழ்த்தின. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்," என்று அவர் கூறினார்.

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link