Virat Kholi: கிங் என அழைக்க வேண்டாம் - விராட் அன்பான வேண்டுகோள்

Tue, 19 Mar 2024-11:29 pm,

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 

 

ஐபிஎல் 2024 முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

 

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

 

இதுதொடர்பாக பேசிய அவர், "என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது. இனிமேல் என்னை விராட் என அழைத்தால் போதும்" என்று விராட் கோலி தெரிவித்தார்.

 

விராட் கோலிக்கு ரசிகர்களிடம் பல செல்லப்பெயர்கள் உள்ளன. அதில் 'கிங் கோலி' என்பது மிகவும் பிரபலமானது. இந்தியன் பிரீமியர் லீக் 2024 க்காக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் அண்மையில் இணைந்து தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

 

ஐபிஎல் 2024 கோப்பையை அடிப்பீர்களா என கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே பதிலளித்த விராட் கோலி முதல் போட்டி சிஎஸ்கேவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறினார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link