ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்? ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் சஞ்சு சாம்சன்?

Sun, 20 Oct 2024-11:57 am,

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்தின் தேதியை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வரவிருக்கும் ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

 

இருப்பினும் இதன் உண்மை தன்மை தெரியவில்லை. தற்போது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் முக்கிய பேட்டராக உள்ளார். 

 

இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2018 மெகா ஏலத்தில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய முயன்றது, ஆனால் இறுதியில் ராஜஸ்தான் அணி அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது. 

 

2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் சஞ்சு சாம்சன். ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சனை தக்க வைக்க ஆர்ஆர் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. 

 

சஞ்சு சாம்சன் 2013 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். பின்னர் 2016 முதல் 2017 வரை டெல்லி அணிக்காக விளையாடினார். பின்னர் மீண்டும் 2018ல் ராஜஸ்தான் அணிக்கு திரும்பினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link