உதயமாகும் குருவினால் ‘சில’ ராசிகள் கை வைத்த காரியம் எல்லாமே வெற்றி தான்!

Sun, 22 Jan 2023-6:14 pm,

செல்வம், சொத்து, கல்வி, குழந்தைகள், வாழ்க்கை துணை மற்றும் உயர் பதவி ஆகியவற்றின் காரணியாக குரு பிருஹஸ்பதி மார்ச் மாதத்தில் உதயமாகப் போகிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் உதயத்தால் எதிர்பாராத பணப்பலன்கள் கிடைக்கும்.புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது நிதி நெருக்கடியிலிருந்து விடுபட உதவும். எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.

குருவின் உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு தொட்டது அனைத்தும் துலங்கும். நீண்ட நாளாக கைக்கு வராத பணம் திரும்ப கிடைத்து பொருளாதார நிலை வலுப்பெறும். குறிப்பாக கல்வி, ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள்.

குருவின் உதயத்தால் கடக ராசிக்காரர்கள் தொட்டது அனைத்தும் துலங்கும். அதிர்ஷ்ட காற்று பலமாக வீசுவதன் மூலம், தொழில் சம்பந்தமான பயணம் செல்வதால் சுப பலன்கள் உண்டாகும். பணியிலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் சிறப்பாக கிடைக்கும்.

குருவின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் வெற்றிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக ஒரு சிறந்த நேரமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்து விரும்பிய இடத்துக்கு மாறலாம். அலுவக பணியில் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link