துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!

Thu, 23 May 2024-2:06 pm,

கடைகளில் விற்கும் ரசாயன பொருட்களை துவைக்கும் போது பயன்படுத்தினால் நல்ல வாசம் வரும். அதற்கு பதிலாக அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி துணிகளில் நல்ல வாசனை வர வைக்க முடியும். 

லாவெண்டர் மற்றும் பெர்கமோட் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி இயற்கையான வாசனையை வர வைக்க முடியும். இதனால் ஆடைகள் புதிய வாசனையுடன் இருக்கும்.

கடைகளில் விற்கப்படும் வாசனை பொருட்கள் பொதுவாக ஒரு நிலையான மற்றும் வழக்கமான வாசனையை வழங்குகிறது. ஆனால் இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் மிகவும் தனித்துவமான வாசனையை கொடுக்கிறது. 

அழுக்கு துணிகளில் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது, சில குறைபாடுகளும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அத்தியாவசிய எண்ணெய்கள் அடர் பச்சை அல்லது சிவப்பு நிறம் கொண்ட துணிகளில் பயன்படுத்தும் போது துணிகளை கறைபடுத்த வாய்ப்புள்ளது.

மேலும், சில துணிகள் எண்ணெய் பசையை தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது, இது காலப்போக்கில் ஆடைகளின் ஆயுட்காலம் அல்லது தரத்தை பாதிக்கலாம்.

கூடுதலாக, அத்தியாவசிய எண்ணெய்களுக்கு அறியப்பட்ட ஒவ்வாமை அல்லது உணர்திறன் கொண்ட நபர்கள் அவற்றைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link