தனயோகத்தினால் பலனை பெறும் சில ராசிகள்... உங்கள் ராசி என்ன?

Mon, 04 Mar 2024-7:13 pm,

ரிஷப ராசிக்கு மார்ச் 5ஆம் தேதி மங்களகரமான நாளாக இருக்கும். வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்ல திட்டம் என்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியிடத்தில் உங்கள் திறன் பாராட்டப்படும்.

கடக ராசியினருக்கு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மறக்க முடியாத நாளாக அமையும். திடீர் பண ஆகாயங்கள் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும். மாணவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ஆளாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம் ராசியினருக்கு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி முன்னேற்றத்தை கொடுக்கும் நாளாக இருக்கும். பணத்தை முதலீடு செய்ய ஏற்ற நாள். வருமானம் பெருகும். வெற்றிகள் உங்களை தேடி வரும்.

 

மகர ராசியினருக்கு, மனதிற்கு மகிழ்ச்சியும் இன்பத்தையும் கொடுக்கும் நாளாக இருக்கும். எதிர்பாராத சந்திப்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கைக்கு வராத பணம் வந்து சேரும். உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

மீன ராசியினருக்கு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி, நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். சக ஊழியர்களின் உதவியினாலும், ஆதரவினாலும், திட்டமிட்டபடி பணியை செய்து முடிப்பீர்கள். அங்கீகாரம் கிடைக்கும்.

பகவான் அனுமனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு சென்று, வணங்கி வெள்ளம் அல்லது உளுந்தை அர்ப்பணிப்பது சிறந்த பலனை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து, அனுமன் சாலிசா ஸ்தோத்திரம் படிப்பதும் வாழ்க்கையில் உள்ள தடங்கல்கள் அனைத்தையும் நீக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link