மரண ஆபத்து நிறைந்த உலகின் 5 தீவுகள்..!!!

Sun, 01 Nov 2020-2:29 pm,

வெனிஸிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள சிறிய தீவான பிரோவேக்லியா தீவு 'மரண தீவு' என்று அழைக்கப்படுகிறது.  இந்த தீவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காலத்திலிருந்து, இந்த தீவு முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. பிரோவேக்லியா தீவு கோஸ்ட் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு செல்லும் தரும் மக்கள் உயிருடன் திரும்பி வர முடியாது என்று நம்பப்படுகிறது. Image credit: Social media

ரீ-யூனியன் தீவு உலகின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.  இது இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு தீவு. ஆனால் இங்கு செல்வது மிகவும் ஆபத்தானது. இதற்குக் காரணம் இங்கே சுறா மீன்கள். இந்த ஆபத்தான மீன்கள் ஒரு நொடியில் மக்களைக் கொன்றுவிடுகின்றன. தீவின் பாதிக்கும் மேற்பட்ட கடற்கரைகளில் பாதுகாப்புக்காக நீச்சல் தடை செய்யப்பட்டுள்ளது. Image credit: Social media

 

மியாகேஜிமா இஜு தீவு உலகின் மிக ஆபத்தான தீவுகளில் ஒன்றாகும். ஜப்பானில் உள்ள இந்த தீவில் உள்ள விஷ வாயுக்களின் அளவு இயல்பை விட மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக, இங்குள்ளவர்கள் எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் பல எரிமலை வெடிப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளன. 2000 ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பில், ஏராளமான விஷ வாயுக்கள் வெளியிடப்பட்டன. பின்னர் எரிமலை குளிர்ந்து விட்டது. ஆனால் நச்சு வாயுக்கள் வெளியே வருவது நிற்கவில்லை. அப்போதிருந்து, மக்கள் இந்த தீவுக்கு வருவதை விரும்புவதில்லை.

Image credit: Social media

கரீபியன் கடலின் நடுவில் அமைந்துள்ள சாபா தீவு பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வருகிறது. வெறும் 13 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவில் சுமார் 2000 பேர் வசிக்கின்றனர். இங்கு அடிக்கடி புயல்கள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. 1997 முதல், இந்த தீவில் பூகம்பங்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கடுமையான எரிமலை வெடிப்பு இங்கு ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. Image credit: Social media

 

ஸ்காட்லாந்தின் க்ரூனார்ட் வளைகுடாவில் அமைந்துள்ள க்ரூனார்ட் தீவும் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. உண்மையில், இரண்டாம் உலகப் போரின்போது, ​​பிரிட்டன் இந்த தீவில் ஆந்த்ராக்ஸ் என்ற விஷ வாயுவை சோதித்தது. இதன் காரணமாக அந்த இடம் விஷமாகிவிட்டது. இந்த வாயு யாராவது சுவாசித்தால் அவரது மரணம் கிட்டத்தட்ட உறுதி எனக் கூறுகிறார்கள். Image credit: Social media

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link