மணிமேகலை போல அரந்தாங்கி நிஷாவும் பிரபல சேனலில் இருந்து விலகலா? அவரே போட்ட பதிவு!!

Mon, 30 Sep 2024-12:31 pm,

பிரபல தொலைக்காட்சியில், முக்கிய கலைஞராக இருப்பவர் அரந்தாங்கி நிஷா. இவர், தமிழ் மக்களால் அதிகம் அறியப்படும் தொலைக்காட்சி கலைஞராக இருக்கிறார். 

2005ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 5வது சீசனில் முக்கிய போட்டியாளராக வந்தார். இறுதிப்போட்டி வரை வந்த இவர், கடைசியில் கப் அடிக்காமல் போனது ரசிகர்களை வருந்த செய்தது. இருந்தாலும், எந்த சேனலில் இவர் பர்ஃபார்ம் செய்தாரோ, அதே சேனலில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று ரசிகர்களை சிரிக்க வைத்தார். 

சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை பெரும் பூதாகரமாக வெடித்தது. 

மணிமேகலை-பிரியங்காவின் சண்டை குறித்து பேசிய அரந்தாங்கி நிஷா, அது அவர்களின் பர்சனல் என ஊடகத்தினரின் கேள்விக்கு பதிலளித்தார். 

அரந்தாங்கி நிஷா, தற்போது தான் வேலை செய்யும் சேனலில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 

உடலை வைத்தும், நிறத்தை வைத்தும் பிறரால் மனம் புன்படும் படி கேலி செய்யப்படுபவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் இவர் பல பொதுநல சேவைகளையும் செய்து வருகிறார். 

சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் அரந்தாங்கி நிஷா, அவர் பணிபுரியும் சேனலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு அவர் ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். 

தன்னை பற்றி பரவும் தவறான தகவல் அடங்கிய போட்டோவை பதிவிட்டிருக்கும் அரந்தாங்கி நிஷா, “யாரு பார்த்த வேலைடா இது?” என்ற கேப்ஷனுடன் போஸ்ட் போட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த தகவல் பொய் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொண்டனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link