சிவனை வழிபட வாழ்வில் சௌபாக்கியங்கள் கிடைக்கும்

Mon, 01 Aug 2022-8:37 pm,

சிவனின் அருளைப் பெற, திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி, வெற்றியை தேடித் தரும். 

திங்கட்கிழமைகளில் சிவ சாலிசா அல்லது சிவ மந்திரத்தை ஜபிக்கவும். ருத்ராஷ்டகம், சிவ மஹிம்னா ஸ்தோத்திரம், சிவதாண்டவ ஸ்தோத்திரம் போன்றவற்றையும் பாராயணம் செய்யலாம். இதன் மூலம் சிவனின் அருளைப் பெறலாம்.

பிரதோஷம் மற்றும் திங்கட்கிழமைகளில்,  சிவனை வழிபடுவதால் சிவனுடன் விநாயகரின் அருளும் கிட்டும்.

நீண்ட காலமாக நிறைவேறாத மன விருப்பங்கள் நிறைவேற, திங்கட்கிழமை  அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதுங்கள். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.

திங்கட்கிழமை, வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் செல்வமும் வளமும் பெருகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link