குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்

Mon, 29 Jul 2024-10:35 am,

மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். சுமார் 13 மாத காலம் அவர் இந்த ராசியில் இருப்பார். இதற்கிடையில் அவரது நிலைகளில் சிறிய மாற்றங்கள் காணப்படும். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. தற்போது நாளை மறுநாள் அதாவது ஜூலை 31 ஆம் தேதி குரு நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். 

 

குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான சுப விளைவுகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

 

ரிஷபம்: குருவின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கலாம். செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். அலுவலகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும், மேலும் சில புதிய பொறுப்புகளை பெறலாம். சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பு உயரும், நல்ல லாபம் பெறலாம். மேலும், திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

 

சிம்மம்: குருவின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அதிர்ஷ்டத்தை பெறளாம். மேலும், தடைபட்ட வேலையில் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். மேலும் வியாபாரத்தில் புதிய வருமான வழிகள் திறக்கும், சம்பள உயர்வு மற்றும் வேலையில் பதவி உயர்வு பெறலாம். இந்த காலகட்டத்தில், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். மனைவியின் ஆதரவையும் பெறுவீர்கள்.

 

தனுசு: குருவின் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். முதலீடு மூலம் லாபம் அடையலாம். உங்கள் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளை பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், போட்டி தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் மத அல்லது சுப நிகழ்ச்சிகளிலில் பங்கேற்கலாம்.

 

குரு நட்சத்திர பெயர்ச்சியுடன் சமீபத்தில் நடந்த குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு சுமாரான பலன்களும் கிடைக்கும். எனினும் சில ராசிகளுக்கு குரு அருளால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். 

 

குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;   குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'  என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link