மங்களம் தரும் மகாசிவராத்திரி 2024... சிவனின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும்?

Fri, 08 Mar 2024-9:01 am,

மகாசிவராத்திரி நாளில், சிவயோகம், கஜகேசரி யோகம், சித்தி யோகம், ஷ்ரவண நட்சத்திரம் ஆகிய சுப யோகங்கள் உருவாகப் போவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

 

மகாசிவராத்திரி நாளில் உருவாகும் மிகவும் மங்களகரமான யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். எனவே மார்ச் 8 ஆம் தேதி அதாவது இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பெறலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமான் நாளாக இந்நாள் இருக்கும். தான தர்மங்கள் செய்வீர்கள். சுப யோகத்தால் புதிய தொழிலை தொடங்க பேச்சு வார்த்தை நடக்கலாம். பணியிடத்தில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். பதவி உயர்வைப் பெறலாம். விருதுகள் பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் நாளாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத் திட்டங்களின் பலன் கிடைக்கலாம். திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமண தடைகள் நீங்கும். 

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். செல்வ வளம் பெருகும். சுகபோகங்கள் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். முதலீடு செய்ய இன்று அனுகூலமான தினம். உத்தியோகத்தில் சம்பள உயர்வை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் மனதில் நிம்மதி உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பண வரவு உண்டாகும். மத நடவடிக்கைகளிலும் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டை பெறுவீர்கள். வேலையில் மகிழ்ச்சி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link