மில்லியன் கணக்கான EPFO வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு!

Mon, 14 Dec 2020-3:01 pm,

முன்னதாக, வட்டி தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அது ஒரு தவணையில் கணக்குகளுக்கு மாற்றப்படும். முன்னதாக செப்டம்பரில், தொழிலாளர் மந்திரி சந்தோஷ் கங்வார் (Santosh Gangwar) தலைமையிலான அறங்காவலர் கூட்டத்தில், EPFO வட்டி 8.15 சதவீதம் மற்றும் 0.35 சதவீதம் என இரண்டு தவணைகளில் வைக்க முடிவு செய்தது.

மார்ச் மாதம் சிபிடி கூட்டத்தில், 8.5 சதவீத வட்டி செலுத்தும் விஷயத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான EPF மீதான 8.5% (ஒரே நேரத்தில் முழு வட்டி) வட்டி விகிதத்தை செலுத்த தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்த முன்மொழிவுக்கு நிதி அமைச்சகம் (Finance Ministry சில நாட்களில் ஒப்புதல் அளிக்கலாம்.

பி.எஃப் வட்டி பணம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடினமான காலங்களில் உதவுகிறது. இதன் மூலம், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், ஓய்வுபெறும் நேரத்தில் வேலை இழப்பவர்களும் மொத்த தொகை கணக்குகளைப் பெறுகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link