குழந்தைகளுக்கு ஜலதோஷ பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்

Wed, 19 Oct 2022-5:57 pm,

வெந்நீர் குடிப்பது ஜலதோஷத்தில் நிவாரணம் அளிக்கிறது. சளியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக சூடான நீரை கொடுங்கள். மிகவும் சூடான நீரை குடிக்க முடியாத சிறு குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான தண்ணீரைக் கொடுங்கள். குளிர்ச்சியான பொருட்களைக் கொடுக்கவே கூடாது. இதனால் விரைவான நிவாரணம் கிடைக்கும்.

 

குழந்தைகளுக்கு சளி பிடித்தால் சாதாரண பால் கொடுப்பதற்கு பதிலாக மஞ்சள் பால் கொடுக்கவும். இதனால் உடலில் சூடு தணிவதுடன் சளி, இருமல் போன்றவற்றிலும் நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது, இது சளியை குணப்படுத்த உதவுகிறது.

குழந்தைகள் சவன்பிராஷ் சாப்பிட்டால், கண்டிப்பாக காலையிலும் மாலையிலும் அவர்களுக்கு சாவன்பிராஷ் கொடுக்கவும். இது குழந்தைக்கு இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் தரும். சாவன்பிராஷ் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

தேனுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து குழந்தைக்கு கொடுங்கள். இது இருமல் மற்றும் சளி இரண்டிலும் நிவாரணம் தரும். காலையிலும் மாலையிலும் 1 தேக்கரண்டி கொடுங்கள்.

குழந்தைக்கு சளி பிடித்தால் நீராவி பிடிக்க வைக்கலாம். இது சளியில் இருந்து நிவாரணம் தரும். குறிப்பாக மூக்கு அடைப்பதால் குழந்தைகளுக்கு இரவில் சரியாக தூங்க முடிவதில்லை. நீராவி பிடிப்பது மூக்கில் அடைந்திருக்கும் சளியை நீக்கவும் குழந்தைகள் வசதியாக சுவாசிக்கவும் உதவுகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link