காலை அல்லது இரவு? முகத்திற்கு ஃபேஸ் வாஷ் எப்போது பயன்படுத்த வேண்டும்?

Mon, 22 Jul 2024-1:58 pm,

ஒவ்வொருவரின் தோல் வகை பொறுத்து அதற்கேற்ப ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். வறண்ட தோல் மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கென தனி தனி ஃபேஸ் வாஷ் உள்ளது.

 

காலையில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளை மற்றும் அதிகப்படியான எண்ணெய்களை நீக்க உதவும். மேலும் முகத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.

 

மறுபுறம், இரவில் தூங்கும் முன்பு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவுது முகத்தில் இருக்கும் தூசி, மேக்கப் போன்றவற்றை நீக்க உதவும். இதன் மூலம் முகப்பரு போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

 

அதிக எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. இவை எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவத உதவும். 

 

உங்கள் தோல் வகைகளுக்கு ஏற்ற மென்மையான ஃபேஸ் வாஷை தேர்வு செய்ய வேண்டும். அப்படி பயன்படுத்தவில்லை என்றால் முகத்தில் எரிச்சல், நீரிழப்புக்கு வழிவகுக்கும். 

 

காலை மற்றும் இரவு என இரண்டு வேலைகளிலும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உகந்த சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link