உலகின் விலை உயர்ந்த பழம் 33,00,000 ரூபாய்! அப்படி என்ன சத்து இருக்கு?

Sat, 04 Dec 2021-2:27 pm,

இந்த முலாம் பழத்தை வாங்குவதைவிட, ஆடம்பரமான ஒரு வீட்டையே இந்த பணத்தில் வாங்கிவிடலாம் தெரியுமா?

லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பணக்காரர்கள் மத்தியில், இதற்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானின் யுபாரி பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படும் முழாம் பழம் இது

இந்த பழம் பழுக்க சுமார் 100 நாட்கள் ஆகும். இது பழக்கடைகளில் கிடைப்பதில்லை. இது ஜப்பானின் யுபாரி பகுதியில் வளர்க்கப்படுகிறது. உள்ளே இருந்து ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த முலாம்பழம் சாப்பிட இனிப்பாக இருக்கும்.

 

2019 ஏலத்தில், இந்த முலாம்பழம் 5 மில்லியன் யென்களுக்கு விற்கப்பட்டது, அதாவது ரூ. 33,00,0000. இந்த முலாம்பழம் குளிர் காலத்தில் வளர்க்கப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 466 முலாம்பழங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இந்த முலாம்பழங்கள் குழந்தை உணவு உற்பத்தியாளர் ஹொக்கைடோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இந்த முலாம்பழங்கள் வழங்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link