அன்னை மகாலட்சுமியின் மனதிற்கு பிடித்த ராசிகள்... பணத்திற்கு பஞ்சம் என்பதே இருக்காது

Thu, 07 Mar 2024-12:01 pm,

வாழ்க்கையில் சிலர் நன்றாக சம்பாதித்தாலும், பணம் கையில் தாங்காமல், செலவாகிவிடும். சிலருக்கு கடின உழைப்பு இருந்தாலும், அதிர்ஷ்டம் கைகூடி வராமல், வசதியான வாழ்க்கை பெற போராட வேண்டிய நிலை இருக்கும். அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் இருந்தால், இவை அனைத்தும் எளிதாகும்.

 

சிலருக்கு அன்னை மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள். இவர்களுக்கு, பேச்சுத் திறன் மற்றும் செயல் திறன் மூலம் எல்லாத் துறையிலும் வெற்றி வாகை சூடி அளவில்லாத செல்வத்தை அனுபவிப்பார்கள் என்கின்றனர்.

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியை அழிக்கும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இந்த ராசிகள், கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் ஈடுபாட்டுடன் செய்வார்கள். இதனால் அனைத்திலும் வெற்றிவாகை சூடி, தனது திறமையினால் வாழ்க்கையின் உச்சத்தை அடைவார்கள். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிர்வகிப்பார்கள்.

 

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். தைரியம், வீரம் ஆகியவற்றை வழங்கும் சூரிய பகவான், இவர்களது வாழ்க்கையை சூரியன் போல பிரகாசிக்க செய்வார். அதோடு இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிடைக்கும். இதனால் சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் கூடும். செல்வ செழிப்புடன் வாழ்க்கையை வசதியாக அனுபவிக்கும் யோகம் இவர்களுக்கு இருக்கும்.

 

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். பொதுவாகவே சுக்கிரன் நிலை வலுவாக இருந்தால், அந்த ராசியினர் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். ராஜ வாழ்க்கை வாழ்பவர்களை, இவர்களுக்கு சுக்கிர திசை என்று கூறும் பழக்கம் உண்டு. சுக்கிர பகவானின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைப்பதால், இந்த ராசிகளுக்கு பொருளாதாரப் பிரச்சினை என்பதை வராது. பணத்திற்கும் பஞ்சம் இருக்காது.

 

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். எனவே நல்லொழுக்கம் கொண்ட இவர்கள், கடின உழைப்பாள்களாகவும், அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். இதனால் மகாலட்சுமியின் அருள் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இவர்களுக்கு வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link