என்னுடைய முடிவு ஐபிஎல் நிர்வாகத்தின் கையில் - ஓய்வு குறித்து தோனி அறிவிப்பு

Thu, 01 Aug 2024-5:29 pm,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, கடந்த ஆண்டு தன்னுடைய கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்தார். இதுவே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் அறிவித்தார் தோனி.

கேப்டன்ஷிப் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது கூட ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் தெரிந்தது. ஐபிஎல் கேப்டன்களுக்கான போட்டோஷூட் நடத்தப்பட்டபோது தான் ருதுராஜ் அந்த போட்டோவில் இருந்தபோது, தோனி கேப்டன்ஷிப்பில் இருந்து விலகியது தெரியவந்தது.

இருப்பினும் தோனி ஐபிஎல் 2024ல் விளையாடினார். எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவல் இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

இது குறித்து தோனி இப்போது முதன்முறையாக பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவது என்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் நிர்வாகம் விரைவில் அதன் விதிமுறைகளை வெளியிட இருப்பதாவும், அந்த விதிமுறைகள் தான், நான் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதை முடிவு செய்யும் என்றும் தோனி கூறியுள்ளார்.

அதாவது தோனி இன்னும் ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஐபில் நிர்வாகம் அடுத்த தொடருக்கான பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளை வெளியிட்டபிறகு உறுதியான முடிவை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுப்பேன் என்றும் எம்எஸ் தோனி கூறியுள்ளார். ஒருவேளை இம்பாக்ட் பிளேயர் விதிமுறை, பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகள் தோனிக்கு சாதகமாக இருந்தால் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. 

இல்லையென்றால் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதனால் ரசிகர்கள் கடைசியாக தோனி ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டு அதன்பிறகு ஓய்வு பெற வேண்டும் என இப்போதே வேண்டுகோள் விடுக்க தொடங்கியுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link