விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?

Mon, 02 Sep 2024-10:37 am,

விராட் கோலி தனது ஆக்ரோஷமான ஸ்டைலுக்காகவும், தோனி தனது அமைதியான பணிக்காகவும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.

 

2014 டிசம்பரில் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பையும், 2016ம் ஆண்டில் ஒயிட்-பால் கேப்டன்சியையும் தோனி விராட் கோலியிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் கடைசி வரை தோனி ஒரு வீரராக செயல்பட்டார். ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.

 

விராட் கோலி கேப்டனாக இருந்தாலும், டிஆர்எஸ் கேட்கும் போது தோனி கையை தூக்கினால் யோசிக்காமல் கோலி அம்பயரிடம் முறையிடுவார். இதுபோல நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. 

 

தற்போது ஒரு பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விராட் கோலியுடன் தனது நட்பு குறித்து பேசியுள்ளார். "நாங்கள் 2008ம் ஆண்டு முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். மேலும் நிறைய போட்டிகளில் ஒன்றாக பேட்டிங் செய்துள்ளோம்"

 

"எங்களுக்குள் வயது வித்தியாசம் இருக்கிறது, நான் ஒரு அண்ணனை போல பேசுவேன். உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.

 

ரசிகர்கள் இவர்களை 'மஹிராத்' என்று அன்போடு அழைப்பது வழக்கம். தோனி ஓய்வு பெற்றதிலிருந்து, இருவரும் எப்போது ஒன்றாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link