நாக பஞ்சமி நாளன்று எதை செய்யலாம்? எதை தவிர்ப்பது அவசியம்?

Tue, 02 Aug 2022-2:46 pm,

நாகபஞ்சமி நாளில் சிவபெருமானை வழிபட வேண்டும். சிவனை வணங்காமல் நாக பஞ்சமி வழிபாடு முழுமையடையாது.

நாக பஞ்சமி நாளில் பூமியை தோண்டக்கூடாது. உண்மையில், பாம்புகள் தரையில் வாழ்கின்றன, நிலத்தை தோண்டுவது பூமிக்குள் வசிக்கும் பாம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இன்று அதை செய்ய வேண்டாம். மேலும், ஒருபோதும் பாம்பை வேண்டுமென்றே துன்புறுத்தவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது.

நாகபஞ்சமி நாளில் பச்சை இலைகளை இலைகளை பறிக்காதீர்கள். இந்த நாளில் பச்சை நிற காய்கறிகள் கூட சாப்பிடக்கூடாது.

நாகபஞ்சமி அன்று மரங்களை வெட்டக்கூடாது, ஏனெனில் அவற்றில் பாம்புகளும் வாழ்கின்றன. மரங்கள் தான் நம் இருப்புக்கு அடிப்படை. 

நாக பஞ்சமி நாளில் ஊசி நூல் பயன்படுத்தக்கூடாது. மேலும், மற்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link