சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ‘இதை’ செய்தால் தரித்திரம் ஏற்படும்!

Sat, 19 Nov 2022-7:18 pm,

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒருபோதும் தூங்க வேண்டாம், வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரியன் மறையும் நேரத்திலிருந்து 2 மணிநேரம் தூங்கக்கூடாது, ஏனென்றால் மாலையில் தூங்குபவர்கள் நோய்வாய்ப்படுவார்கள் ; அவர்களின் ஆயுட்காலம் குறைகிறது என்று கூறப்படுகிறது.

துடைப்பத்தை தவறுதலாக கூட பயன்படுத்தாதீர்கள். இந்து மதத்தில் துடைப்பம் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை பெருக்குவது நல்லதல்ல. ஏனென்றால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இதை செய்தால், அன்னை லட்சுமி அவர்கள் மீது கோபப்படுவார். மேலும் அவர்களின் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு பதிலாக, வறுமை சூழத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பால், தயிர், உப்பு மற்றும் தானியங்களை தானம் செய்யக்கூடாது. ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் வீட்டில் தரித்திரம் தங்கி, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மாலையில் எந்த ஆணும் பெண்ணும் வீட்டின் வாசலில் அமரக்கூடாது, ஏனென்றால் மாலையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள். இந்த நேரத்தில் அவள் வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டால், அப்போது அன்னை லட்சுமி கோபித்துக்கொண்டு போய்விடுவாள். இதனால், பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

சனாதன தர்மத்தில் துளசி செடி வழிபடக்கூடியதாகவும், அன்னை லட்சுமியின் வடிவமாகவும் கருதப்படுகிறது. எனவே  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துணி துவைப்பது மற்றும் உலர்த்துவது கூடாது என கருதப்படுகிறது. ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் எதிர்மறை சக்தி வீட்டிற்குள் நுழைகிறது. இதைச் செய்வதன் மூலம் வீட்டில் இருந்து வந்த லட்சுமி வெளியேறுவாள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. Zee Media இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link