NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோ

Sat, 12 Oct 2024-8:24 pm,

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது அரசு ஊழியர்களுக்கான ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் 60 வயதில் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியத்தைப் பெறலாம். இதற்கான முழுமையான கணக்கீட்டை பற்றி இந்த பதிவில் காணலாம்.

25 வயதில் ஒருவர் என்பிஎஸ் -இல் முதலீடு செய்யத் தொடங்குகிறார் என வைத்துக்கொள்ளலாம். மாதா மாதம் இதில் ரூ.13,100 முதலீடு செய்ய வேண்டும். இதில் 10% வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்கீட்டின் படி, ஓய்வு பெறும்போது ரூ.5 கோடி கார்பஸை சேர்க்க முடியும். அதில் 40% தொகை வருடாந்திரத்தின் (Annuity) வடிவில் ஓய்வூதியத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும், NPS எந்த நிலையான நன்மைக்கும் உத்தரவாதம் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த என்பிஎஸ் திட்டத்தில், என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) செய்யும் முதலீடு மற்றும் பெறும் வருமானத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், இதில் முதலீடு செய்யும்போது எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேம்டியது மிக அவசியமாகும்.

பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்களின் வருமானம் நின்றுவிடும். ஆனால் செலவுகள் அப்படியே இருக்கும் அல்லது அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நிதி சுதந்திரத்தை பராமரிக்க நிலையான வருமான ஆதாரம் தேவைப்படுகிறது. ஆகையால் இள வயதிலேயே பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான திட்டமிடலையே தொடங்க வேண்டும்.

NPS இல் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெற முடியும். அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

ஒரு பணியாளர் 25 வயதில் NPS -இல் முதலீடு செய்யத் தொடங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 60 வயது வரை முதலீடு செய்வார். அதாவது முதலீட்டு காலம் 35 ஆண்டுகள். NPS இல் 10% வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மாதாந்திர முதலீடு: ரூ.13,100, மொத்த முதலீடு (35 ஆண்டுகளில்): ரூ.55.02 லட்சம், மொத்த வருவாய்: 10%, மியூச்சுவல் ஃபண்ட் முதிர்வுத் தொகை: ரூ.5.01 கோடி, வருடாந்திர முதலீடு: 40% (ரூ.2 கோடி), மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம்: 6%, ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.1 லட்சம்

NPS இல், உங்கள் மொத்த வைப்புத் தொகையில் குறைந்தபட்சம் 40% ஆன்யூட்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். வருடாந்திர விகிதம் அதிகமாக இருந்தால், உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் அதிகமாக இருக்கும். இந்த முதலீட்டின் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் ரூ.50,000 வரை வரிவிலக்கு பெறலாம்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் உங்கள் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை பெற அறிவுறுத்தப்படுகின்றது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link