ஷிரடி தரிசனத்துடன் ஜோதிர்லிங்க தரிசனமும் கிடைக்கும் இந்த IRCTC tour package-ஐ தவறவிடாதீர்கள்

Tue, 17 Nov 2020-12:47 pm,

இந்த சுற்றுப்பயண தொகுப்பின் கீழ், பயணிகள், ஓம்காரேஷ்வர், மகாலாலேஷ்வர், ஸ்டாஸ்யூ ஆஃப் யுனிடி, சோம்நாத், துவாரகா, அகமதாபாத், புனே, பர்லி வைஜ்நாத், அவுரங்காபாத், ஷிரடி, நாசிக், ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

IRCT-ன் இந்த சுற்றுப்பயண தொகுப்பு 11 இரவுகள் / 12 நாட்களுக்கானது. இந்த டூர் தொகுப்பின் கீழ், 20.12.2020 அன்று மதியம் 12.00 மணிக்கு ரீவாவிலிருந்து ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த டூர் தொகுப்பில், பயணிகள் 3rd ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பின் கீழ் பயணிக்கலாம். இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரீவா, சத்னா, மைஹார், கட்னி (கட்னி), ஜபல்பூர், நர்சிங்பூர், பிபாரியா, இத்தார்சி, ஹோஷங்காபாத், ஹபீப்கஞ்ச், செஹோர், மக்ஸி, தேவாஸ் ஆகிய நிலையங்களில் போர்டிங் செய்யலாம்.

டூர் தொகுப்பின் standard category-க்கு ஒருவருக்கு ரூ .11,340 செலவாகும். டூர் தொகுப்பின் comfort category-க்கு ஒரு நபருக்கு ரூ .13,860 செலவிட வேண்டியிருக்கும்.

பயணிகள் வழியில் பொது மண்டபங்களில் தங்க வைக்கப்படுவார்கள். பயணத்தின் போது பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலா பேருந்துகளில் பயணிகள் அழைத்துச் செல்லப் படுவார்கள்.

ரயிலில் அறிவிப்பு மற்றும் தகவல் அமைப்பு நிறுவப்படும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒரு செக்யூரிட்டி கார்ட் நிறுத்தப்படுவார். IRCTC அதிகாரி ஒருவர் ரயிலில் ரயில் கண்காணிப்பாளராக இருப்பார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link