Health News: உங்கள் உணவில் பருப்பு அதிகரித்தால் வரும் நன்மைகளும் தீமைகளும்

Wed, 17 Feb 2021-10:27 pm,

வளரும் குழந்தைகளுக்கு பருப்பு மிகவும் அத்தியாவசியமானது. உடல் உருப்புகளின் திடமான உருவாக்கத்திலும், அதற்கு தேவையான புரதங்களை உருவாக்குவதிலும் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், அதிக அளவில் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் சில குறைபாடுகளும் ஏற்படுகின்றன.

பருப்பால் உடல் நலக் குறைபாடா என நீங்கள் அச்சரியப்படலாம். குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பருப்பை உட்கொள்வதால் வரும் தீங்குகளைப் பற்றி இங்கே காணலாம். நீங்கள் அதிக அளவில் பருப்பு வகைகளை உட்கொண்டால், அது உங்கள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. இதனால் உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

 

பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பதால், வாயு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், உணவில் பருப்பின் அளவு அதிகமானால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிக பருப்பு வகைகளை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வராமல் போய்விடுகின்றன. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகும்.

பருப்பு வகைகளை சாப்பிடுவதால் பல நன்மைகளும் உள்ளன. பயத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பை கலந்து சாப்பிட்டால், உடல் நலனும் வயிறும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

இந்த இரண்டு பருப்பு வகைகளின் கலவையை நீங்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். கோடையில் குளிர்ச்சியான பதார்த்தங்களை சாப்பிடுவது நல்லது. அதேபோல் குளிர்காலத்தில் சூடான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், பருவத்திற்கு ஏற்ப பருப்பு வகைகளையும் நீங்கள் பிரித்து சாப்பிடலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link