இனி ஒரே ஒரு நுழைவுத் தேர்வை எழுதினால் போதும், 2021-ல் மாறுகிறது இந்த முக்கிய விதி: விவரம் உள்ளே

Sat, 12 Dec 2020-9:22 pm,

உயர்கல்வி செயலாளர் அமித் கரே, FICCI ஏற்பாடு செய்த ஒரு மெய்நிகர் கூட்டத்தில், '2021 இல் சில பெரிய மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு, கிரெடிட் வங்கியின் உருவாக்கம் ஆகியவை இதில் அடங்கும். கிரெடிட் வங்கியில் மாணவர்கள் தங்கள் அகாடமிக் கிரெடிட்டை பாதுகாத்து வைக்கலாம்’ என்று கூறினார்.

2021 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் குறித்த விவரங்களை அளித்த அவர், 'பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் (NCTE) போன்ற அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டும்.’ என்றார். நாட்டில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க, ஒரு தேசிய ஆராய்ச்சி நிதியும் உருவாக்கப்படும்.

கரே கூறுகையில், 'அனைத்து தனியார், மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களும் காம்படீடிவ் ஃபண்டிங்கைக் கொண்டிருக்கலாம். இது அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை போன்றது. நாங்கள் இன்னும் சிலவற்றை இதில் சேர்த்துள்ளோம். சமூக அறிவியலும் தேசிய ஆராய்ச்சி நிதியத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.’ என்றார்.

மருத்துவ மற்றும் சட்டக் கல்வியைத் தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் இந்திய உயர் கல்வி ஆணையம் (HECI) அமைக்கப்படும். ஏஜென்சியின் படி, இந்த மாற்றங்கள் 2021 முதல் செயல்படுத்தப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link