பட்ஜெட்டுக்கு தயாராகும் புதிய நாடாளுமன்ற கட்டடம்... உள்ளே எப்படி இருக்கு பாருங்க...!

Sat, 21 Jan 2023-7:54 am,

புதிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 1, 224 பேர் அமரக்கூடிய வசதியும், நான்கு மாடிகள் உயரமும் இருக்கும். முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் பெரிய அரங்குகள், ஒரு நூலகம், ஏராளமான பார்க்கிங் மற்றும் கமிட்டி அறைகள் இருப்பது தெரிகிறது. (புகைப்படம்: centralvista.gov.in)

 

தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்துடன்தான், புதிய நாடாளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டம், 2022 நவம்பருக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பணிகள் தாமதாமாகியுள்ளது. (புகைப்படம்: centralvista.gov.in)

 

புதிய மக்களவை அரங்கு, தற்போது உள்ளதை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். இது 888 இருக்கைகளைக் கொண்டிருக்கும். இது மயில் வடிவில் வடிவமைக்கப்பட்ட கட்டடமாகும்.  (புகைப்படம்: centralvista.gov.in)

 

புதிய மாநிலங்களவை அரங்கு, தற்போதுள்ளதை விட பெரியதாக இருக்கும். இது 384 பேர் அமரக்கூடியது. இது தாமரை வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: centralvista.gov.in)

 

புதிய நாடாளுமன்றத்திற்குள் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: centralvista.gov.in)

 

புதிய மற்றும் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் வரைபடம். புதிய கட்டமைப்பும், தற்போது உள்ள நாடாளுமன்றத்தின் கட்டடமும் ஒருங்கிணைந்து செயல்படும். (புகைப்படம்: centralvista.gov.in)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link