‘எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டாரே..’ பிரசாந்தை கண்டு கலங்கும் நெட்டிசன்கள்!

Tue, 16 Jan 2024-5:10 pm,

90ஸ்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர், பிரசாந்த். இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகனான இவர், வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். இவர் அடுத்தடுத்து நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

விஜய்யின் 68வது படமான ’Greatest Of All Time’ படத்தில் பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பல ஆண்டுகளாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்காத இவர், இந்த படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். 

பிரசாந்த், நடிப்பில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவின. குறிப்பாக மம்பட்டியான் படத்திற்கு பிறகு இவர் நடித்த புலன் விசாரணை 2, சாகசம், ஜானி உள்ளிட்ட படங்கள் வந்த தடமும் தெரியவில்லை போன இடமும் தெரியவில்லை என்ற கருத்துக்களையே ரசிகர்களிடம் இருந்து பெற்றது. 

2018ஆம் ஆண்டிற்கு பிறகு, பிரசாந்த் ‘கோட்’ படம் மூலமாகத்தான் தமிழ் திரையுலகிற்குள் மறு பிரவேசம் செய்ய உள்ளார். 

பிரசாந்த் நடிப்பில், அந்தாகன் என்ற படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடைப்பெற்று நிறைவடைந்தது. இது, இந்தி படமான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

பொங்கல் தினத்தை முன்னிட்டு ’கோட்’ படத்தின் போஸ்டர் வெளியானது. இதில், விஜய்க்கு பின்னால் துப்பாக்கியுடன் பிரசாந்த் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கோட் ஸ்குவாட் என்று பலர் அழைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஹிட் ஹீரோவாக இருந்த பிரசாந்த், இப்போது இன்னொரு ஹீரோவிற்கு பின்னால் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டரை பார்த்து கலங்கி வருகின்றனர். 

கோட் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டில் ஆரம்பித்து தொடந்து நடைப்பெற்று வருகிறது. இப்படம், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link