விராட் கோலியின் அடுத்த உலக சாதனை! இந்த ரெக்கார்டை யாரும் நெருங்கக்கூட முடியாது

Mon, 25 Mar 2024-10:39 pm,

விராட் கோலி என்றாலே கிரிக்கெட்டில் சாதனை மன்னன் என்று கூறலாம். இந்திய அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக சாதனைகளை ஒவ்வொரு போட்டியிலும் படைத்துக் கொண்டிருக்கிறார்.

 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியிலும் அப்படியான அரிய சாதனை ஒன்றை இப்போது விராட் கோலி படைத்திருக்கிறார். இந்த சாதனையை எல்லாம் யாரும் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது.

 

பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்தார்.

 

இது 20 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த 100வது அரைசதம் ஆகும். இதற்கு முன்பு இப்படியொரு சாதனையை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் படைத்தது இல்லை.

 

இப்போட்டியில் ஓப்பனிங் இறங்கிய கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். இரண்டாவது பந்திலேயே பேரிஸ்டோவ் கேட்ச் மிஸ் பண்ணியதால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

 

அதேபோல் ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த 51வது அரைசதமாகும். 17வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடும் விராட் கோலி இதுபோன்று பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் ஐபிஎல் சாம்பியன் என்பது மட்டும் அவருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link