ஜனவரியில் சனி மாற்றம்: இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம், பண மழை பொழியும்

Thu, 24 Nov 2022-7:11 pm,

சனியின் இந்த ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் அமையும். சில ராசிகள் மீதான ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் விலகும், சில ராசிகளுக்கு இவை தொடங்கும். ஜனவரி 17 நடக்கவுள்ள சனி பகவானின் பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படவுள்ள தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

ஜோதிட சாஸ்திரப்படி, ஜனவரி 17, 2023 இரவு 8 மணி 2 நிமிடத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி, கும்ப ராசிக்குள் நுழைவார். சனி மாறியவுடன் 2 ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்தும் 1 ராசிக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையால் ஏற்பட்ட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

 

2023 ஜனவரியில் சனி கும்ப ராசியில் நுழையும் போதே துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும். இத்துடன் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

சனி கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் 2023 ஜனவரி முதல் மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். இதுதவிர மகரம், கும்ப ராசிகளிலும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசை தொடங்கும். 

இத்தகைய சூழ்நிலையில், சனியின் தோஷங்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி பகவானுக்கான பரிகாரங்களை செய்வது நல்லது. சனி பகவானுக்கு விளக்கு ஏற்றுவது, ஏழைகளுக்கு தானம் செய்வது, விலங்குகளுக்கு உணவளிப்பது ஆகிய பரிகாரங்களால் நன்மை கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link