வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் ரோஜா..!!

Fri, 11 Feb 2022-3:46 pm,

வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு ரோஜா மலரில் கற்பூரத்தை ஏற்றவும். கற்பூரம் எரித்த பிறகு, அந்த மலரை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்கும்.

சுக்ல பக்ஷத்தின் முதல் செவ்வாய்கிழமையன்றும், பகவான் ஹனுமனுக்கு 11 புதிய ரோஜா பூக்களை அர்ப்பணிக்கவும். இதை தொடர்ந்து 11 செவ்வாய் கிழமைகள் செய்யவும். ஹனுமான் மகிழ்ச்சியடைந்து தனது விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

செவ்வாய்கிழமை அன்று சிவப்பு துணியில் சந்தனம், சிவப்பு ரோஜா மற்றும்  குங்குமத்தை வைத்து கட்டி அதை வீடு அல்லது கடையில் உள்ள பெட்டகத்தில் வைக்கவும். இதனால், பணம் விரயம் ஆகாமல் இருக்கும்.

வீட்டில் உள்ள ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், வெற்றிலையில் ரோஜா பூக்கள் நோயாளிக்கு  திருஷ்டி சுற்றுவது போல் 11 முறை சுற்றி நாற்சந்தியில் போடவும், திருஷ்டி கழிந்து உடல் நிலை சீராகும்.

 

ஒரு வெள்ளைத் துணியில் நான்கு மூலைகளிலும் ரோஜாக்களை வைத்து கட்டவும். அந்த துணையின் நடுவில் ஒரு ரோஜாவை வைத்து கட்டவும். பின்னர்,ஓடும் ஆற்றில் எறிந்து விடுங்கள்.  இதன் மூலம் கடனில் இருந்து விரைவில் விடுபடலாம். இதனுடன் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link