மீண்டும் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட்டில் சச்சின்

Mon, 30 Sep 2024-6:46 pm,

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப இருக்கிறார்

 

பல தகர்க்க முடியாத கிரிக்கெட் சாதனைகளை செய்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆனாலும் சச்சினை கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை

 

எப்படியாவது சச்சின் கிரிக்கெட் களத்தில் மீண்டும் ஆடுவதை பார்க்க வேண்டும் என்றும் விரும்புபவர்கள் கோடான கோடி பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான குட் நியூஸ் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடப்போகும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டி விரைவில் நடத்தப்பட இருக்கிறது. 

அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாட இருக்கின்றனர்.

அதில் இந்திய அணிக்காக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் விளையாட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link