IPL Mini Auction: `CSK எனக்காக...’ சுட்டிக் குழந்தை சாம் கரனின் ரியாக்ஷன்

Sat, 24 Dec 2022-12:23 pm,

ஐபிஎல் போட்டியில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய சாம் கரனை 18.50 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

ஏற்கனவே அவர் பஞ்சாப் அணியில் இருந்து ஏலத்திற்கு வந்தபோது தான் சென்னை அணி வாங்கியது. இந்த முறை மீண்டும் அவர் ஏலத்திற்கு வந்தார்.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பஞ்சாப், அதிக விலை கொடுத்து அவரை மீண்டும் தங்கள் அணிக்கே அழைத்துச் சென்றது.

 

சாம் கரனை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிக் குழந்தையாக இருந்தார். அவரை தோனி ஆல்ரவுண்டராக பயன்படுத்தினார்.

 

அவருக்கு பல கோடிகளை கொடுக்க தயாராக இருந்தபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்க முடியவில்லை. இதுகுறித்து பேசிய சாம் கரன், என்னை வாங்க சென்னை அணி முயற்சி செய்ததே எனக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link