மனநிம்மதிக்காக ஆன்மிக சுற்றுலா சென்றுள்ள சமந்தா!

Sat, 23 Oct 2021-3:37 pm,

திரையுலக பிரபலங்களான நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

 

திடீரென இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றியதாகவும், அதனால் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்றும் வதந்திகள் வந்ததையடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே விவகாரத்து செய்து கொள்ள போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

 

இதனையடுத்து விவாகரத்து, தவறான வதந்தி என்று பல பக்க மன அழுத்தத்தால் இருந்த நடிகை சமந்தா, அவரது நண்பரும், ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டியுடன் ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார்.

 

ரிஷிகேஷில் உள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்று,கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

ரிஷிகேஷில் பயணத்தை முடித்த பின்னர், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி,யமனோத்ரி போன்ற இடங்களுக்கும் சென்று தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தை ஸ்மூத்தாக முடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link