சனி பெயர்ச்சி.. மகாராஜ பொற்காலம், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

Sat, 07 Sep 2024-9:07 am,

சனி தற்போது அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார். தற்சமயம் கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி கதியில் தீபாவளிக்குப் பிறகு அதாவது நவம்பர் 15-ம் தேதி பயணிக்க உள்ளார். இது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று பார்ப்போம்.

மிதுனம்: சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையை சாதகமான பலனைத் தரும். அதிர்ஷ்டம் பெருகும். பொருள் இன்பம் கிடைக்கும். பெரியவர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லலாம்.

 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி நன்மை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலனை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேமன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள்.

விருச்சிகம்: சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருள் வசதியைத் தரும். நிலம், கட்டிடம் அல்லது வாகனம் வாங்கலாம். பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.

தனுசு: சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பெறலாம். புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். பெரிய நன்மைகளைத் தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி அனைத்து துறைகளிலும் வெற்றி வாய்ப்புகளைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளை பெறலாம். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பணியிடத்தில் புதிய மற்றும் ஏற்படும். பெரிய பொறுப்புகளைப் பெறலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்: சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மரியாதை அதிகரிக்கும். வேலையில் சம்பள உயர்வு பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.      

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link