இந்தியாவில் தான் பாம்பு கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்! பாம்புக்கடிக்கு முறிவு மருந்து!

Thu, 14 Mar 2024-4:27 pm,

பாம்பு கடித்தவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில் உள்ள சவால்கள் தான் உயிரிழப்பை அதிகரிக்கிறது. கடித்த பாம்பு எது என்பதை அறிய, சரியான பாம்பு இனத்தை கண்டறிதல், சரியான நேரத்தில் பாம்பு கடிக்கு சிகிச்சைக் கொடுப்பது என பல பிரச்சனைகளால் பாம்பு கடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாக உள்ளது

மத்திய சுகாதார அமைச்சகம் 15400 என்ற தேசிய ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிக்கு சரியான தகவல் மற்றும் சரியான உதவி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

 

இந்தியாவில் 3 லட்சம் பாம்பு கடி வழக்குகள் மற்றும் 2000 இறப்புகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன, உண்மையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30-40 லட்சம் பாம்பு கடி வழக்குகள் பதிவாகின்றன, அதில் 50,000 பேர் உயிரிழக்கின்றனர்

இந்தியாவில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்கள் நிகழ்கின்றன. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உட்பட இந்தியாவில் மொத்தம் 10 மாநிலங்கள் பாம்பு கடித்தால் ஏற்படும் மரணத்திற்கு இழப்பீடு வழங்குகின்றன.மாநிலத்தைப் பொறுத்து, இந்தத் தொகை ₹ 20,000 முதல் ₹ 400,000 வரை இருக்கும்.

இந்தியாவில் மொத்தம் 310 வகையான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன, அவற்றில் 66 விஷத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன, அவற்றில் பல ஆபத்தானவை

பாம்பு கடித்த உடன், ஒரு நபரின் உடல் திடீரென செயல்படுவதை நிறுத்துகிறது. 40 முதல் 45 நிமிடங்களில் நோயாளிக்கு விஷ முறிவு கொடுக்கப்படாவிட்டால், அவர் இறக்கக்கூடும் 

இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் பாம்புக்கடிக்கு முறிவு மருந்தை  (Polyvalent anti-snake venom) அத்தியாவசிய கோரிக்கைகள் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் இந்த மருந்து அவர்களுக்கு வழங்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link