சிக்கலில் ஸ்ரேயாஸ் அய்யர்..! 1 ஆண்டு தடை விதிக்கும் பிசிசிஐ?

Thu, 22 Feb 2024-1:41 pm,

இஷான் கிஷனைத் தொடர்ந்து பிசிசிஐ அதிருப்திகுள்ளாகியிருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், இப்போது பிட்னஸூடன் இருக்கிறார்.

 

அதனால் அவர் உடனடியாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால் அதனை ஸ்ரேயாஸ் அய்யர் புறக்கணித்து விட்டார். 

 

ரஞ்சி டிராபியில் விளையாடாத ஸ்ரேயாஸ் அய்யர், தான் ஏன் விளையாடவில்லை என்ற காரணத்தை பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதில் தனக்கு தசைப்பிடிப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

 

ஆனால் இந்த காரணத்தை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் ஸ்ரேயாஸ் அய்யர் பிட்னஸூடன் இருப்பதாக அறிக்கை கொடுத்துவிட்டதால், ஸ்ரேயாஸ் பொய் சொல்வதாக அதிருப்தி அடைந்துள்ளது.

 

ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடினால் காயம் ஏற்பட்டு அதனால் ஐபிஎல் போட்டிகள் விளையாட முடியாமல் போகலாம் என்பதால் ஸ்ரேயாஸ், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்திருக்கிறார்.

 

இதனை உறுதி செய்திருக்கும் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கையில் இஷான் கிஷன் சிக்கியிருக்கும் நிலையில், அடுத்ததாக இப்போது ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்துள்ளார்.

 

இருவரின் பெயர்களும் தலா 1 ஆண்டுக்கு இந்திய அணி தேர்வில் பரிசீலிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றனர். அதன்பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்பதால் இருவரும் இனி இந்திய அணியில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link