Breast Milk: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை வழிகள்

Tue, 29 Mar 2022-3:55 pm,

பிரசவத்திற்குப் பிறகு, குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பெண்களின் மார்பகத்தில் போதுமான பால் இல்லை என்றால், குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயம் உதவும், வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை குடிக்கவும். இது தவிர ஊறவைத்த வெந்தயத்தை அரிசி மற்றும் பாலுடன் சமைத்து சாப்பிடவும்.

தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்கள், உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முருங்கை இலையை சின்ன வெங்காயத்துடன் நெய்யில் வறுத்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளவும். இது தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.

பால் சுரப்பு குறைந்தாலும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள், ஏனெனில் குழந்தை மார்பகங்களை சப்பி பால் குடிக்கும்போது, தாய்ப்​​பால் சுரப்பு இயல்பாகவே அதிகரிக்கும். எனவே குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்

 

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எப்போதும் சமச்சீரான உணவை எடுத்துக்கொண்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link