தொண்டை வலியால் அவதியா? நிவாரணம் பெற இவற்றை செய்யலாம்

Sun, 04 Sep 2022-4:18 pm,

உப்பு நீர்: சிறிது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து வாய் கொப்பளிப்பது தொண்டை வலியின் அசௌகரியத்தைக் குறைக்க உதவும். ஒரு நாளைக்கு மூன்று முறை உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை வலியிலிருந்து விடுபடலாம்.

இஞ்சி: இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை வலி மற்றும் அசௌகரியத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். தொண்டை வலி இருக்கும் போது இஞ்சி டீ குடிப்பது நல்லது.

கிராம்பு: கிராம்பு தொண்டை வலி நிவாரணியாகும். கிராம்புகளை மென்று அதன் சாறு சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குறையும்.

துளசி: துளசி இலையைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் குடித்தால் தொண்டை வலி குறையும். துளசி இலைகளைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் கொப்பளிப்பதும் நல்லது.

மஞ்சள்: சிறிது மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி நீங்கும். அதேபோல் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது தொண்டை புண் நீங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link