விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?

Sat, 10 Aug 2024-3:42 pm,

சமீபத்தில் இந்திய அணியின் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பெற போராடி வருகிறார். இதுவரை 1 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 

 

2023 ஒருநாள் உலக கோப்பை அணியில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை. தொடர்ந்து ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் பெரிதாக சாதிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

 

சூர்யகுமார் யாதவ் தலைமையில் சமீபத்தில் இந்திய அணி இலங்கையுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். 

 

இந்திய அணி அடுத்ததாக அக்டோபர் மாதம் பங்களாதேஷுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இடம் பெற சூர்யகுமார் யாதவ் முயற்சி செய்து வருகிறார்.  

 

இதற்காக ஆகஸ்ட் 27-ம் தேதி சேலத்தில் தொடங்கும் புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான மும்பை விளையாட உள்ளது. இந்த தொடர் சூர்யகுமாருக்கு உதவிகரமாக இருக்கும். 

 

சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபியில் விளையாடினார். இதுவரை 82 முதல்தர போட்டிகளில் 5628 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 29 அரைசதங்கள் மற்றும் 14 சதங்களுடன் 43.62 சராசரியை வைத்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link