நெஞ்செரிச்சல், எடை இழப்பு, மார்பு வலி, குரலில் மாற்றம்: நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்

Thu, 25 Jul 2024-11:29 am,

இந்த நாட்களின் பலருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது. துரித உணவுகள் அதிகமாகியுள்ள இந்த காலத்தில் இந்த பிரச்சனை அதிகமாகி வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது சாதாரண அமிலத்தன்மை அல்லது வாயு பிரச்சனையாக இருக்கலாம் என பலர் எண்ணிக்கிள்கிறோம். இந்த காரணங்களாலும் நெஞ்செரிச்சல் இருக்கலாம் என்றாலும், வேறு சில தீவிர காரணங்களாலும் இது ஏற்படக்கூடும்.

நெஞ்செரிச்சல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகையால் மார்பில் தொடர்ந்து எரியும் உணர்வு இருந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து அதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். 

நெஞ்செரிச்சல் வாயுத்தொல்லை, இரைப்பை பிரச்சனைகள், ஏசிட் ரிஃப்ளக்ஸ், அஜீரணம் போன்ற பல பிரச்சனைகளால் ஏற்படக்கூடும். ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்து, பிற அறிகுறிகளுடன் தொடர்புடையதாக இருந்தால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நுரையீரல் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.

தொடர் இருமல்: 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்து, இரும்பும் போது இரத்தமும் வந்தால், அது நுரையீரல் புற்றுநோயின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலை நுரையீரலில் பெரிய சிக்கலை குறிக்கிறது. இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. பொதுவாகவே தொடர்ச்சியான இருமலைப் புறக்கணிப்பது ஆபத்தானது.

சுவாசிப்பதில் சிரமம்: சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். படிக்கட்டுகளில் ஏறும் போதோ அல்லது லேசான உடல் உழைப்பில் ஈடுபட்டாலோ மூச்சுத் திணறல் ஏற்பட்டால், நுரையீரல் செயல்பாடு குறைவதற்கான அறிகுறியாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலை நுரையீரலில் கட்டியின் வளர்ச்சி காரணமாக ஏற்படக்கூடும்.

எடை இழப்பு: உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சி ஏதும் செய்யாமல். உங்கள் எடை வேகமாகக் குறைந்தால், அதை ஒரு தீவிர பிரச்சனையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் புற்றுநோய் செல்கள் உடலின் ஆற்றலை விரைவாகப் பயன்படுத்துகின்றன.  இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. எடை இழப்புடன், சோர்வு, பலவீனம் மற்றும் பசியின்மை ஆகியவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மார்பு வலி: மார்பு வலி நுரையீரல் புற்றுநோய்க்கான ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கக்கூடும். அழமாக இழுத்து சுவாசிக்கும்போது, இருமலின் போது அல்லது சிரிக்கும்போது இது அதிகரிக்கிறது. இந்த வலி நுரையீரலில் உள்ள வீக்கம் அல்லது கட்டியால் ஏற்படுகிறது. இது நுரையீரலின் சவ்வை பாதிக்கிறது. இப்படிப்பட்ட மார்பு வலியை அலட்சியம் செய்யக்கூடாது. இந்த நிலை நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குரலில் மாற்றம்: நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டால், குரல் கனமாகி, பேசுவதில் சிரமம் ஏற்படக்கூடும். தொடர்ந்து தொண்டை வலி ஏற்படுவது இதற்கான ஒரு பொதுவான அறிகுறியாகும். காரணம் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு தொண்டை வலி இருந்தால், உடனடியாக மருத்துவரை அனுகி பரிசோதனை செய்வது நல்லது. 

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link