மிக்ஜாம் புயல் எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட தமிழ்நாடு அரசு

Sat, 02 Dec 2023-5:26 pm,
health alert by cyclone

மிக்ஜாங் புயல் சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்

cyclone alert

சென்னையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் ஏறக்குறைய நிரம்பிவிட்ட நிலையில், உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. ஏரிகளின் வழித்தடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது

Weather Forecast

இந்த நிலையில், புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். 

புயல் எச்சரிக்கை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் இருக்க வேண்டுமென மாநில சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்றும், அவரச கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன

நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

தேவையான அளவு கிருமி நாசினி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென பொது சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவு.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link