இறந்து போன கணவரின் போட்டோக்களை பதிவிட்ட சீரியல் நடிகை! ரசிகர்கள் அட்வைஸ்..

Tue, 02 Jul 2024-5:52 pm,

நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா. தொடர்ந்து பல பிரபலமான சீரியல்களில் நடித்திருக்கிறார். 

தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமன்றி, இன்ஸ்டாகிராம் தளம் மூலமாகவும் பிரபலமாக வலம் வருகிறார். 

ஸ்ருதிக்கும், உடற்பயிற்சி நிபுணர் அர்விந்த் சேகருக்கும் 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

ஸ்ருதி-அர்விந்த் திருமணம் காதல் திருமணம் ஆகும். இருவரும் திருமண வாழ்க்கைக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது ரீல்ஸ் செய்தும் பதிவிட்டு வந்தனர். 

கடந்த ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 4ஆம் தேதி எதிர்பாராத விதமாக அர்விந்த் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இந்த செய்தி, ஷண்முக பிரியாவின் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது கணவரின் இறப்புக்கு காரணம் மாரடைப்புதான் என்று கூறிய ஷண்முக பிரியா, தேவையற்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

தன் கணவருடைய இறப்பிற்கு பின்பும் தொடர்ந்து அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், ஷண்முக பிரியா. 

இதை பார்த்த அவரது ரசிகர்கள், அவர் இந்த உலகில் இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும் என்றும், “இன்னும் அவர் உயிருடன் இருப்பது போல நீங்கள் நடந்து கொள்கிறீர்கள், இது நல்லதல்ல” என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link