ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!

Mon, 01 Jul 2024-6:14 pm,

இந்திய கிரிக்கெட்டின் அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஓப்பனிங் செய்து இருந்தனர்.

ரோஹித் மற்றும் விராட் அடுத்த தலைமுறைக்கு விட்டுக்கொடுத்துள்ள நிலையில், இந்தியாவுக்கு இப்போது ஒரு புதிய தொடக்க ஆட்டக்காரர்கள் தேவை. அந்தவகையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை பார்ப்போம்.

ஷுப்மான் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் புதிய தொடக்க ஆட்டக்காரர்களாக வர அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல்லிலும் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஆட்டக்காரங்களாக தங்களை நிரூபித்துள்ளனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மற்றொரு தொடக்க ஜோடியாக இருக்க முடியும். இடது கை வலது கை பேட்ஸ்மேன்களை அணி நிர்வாகம் விரும்புவதால் இவர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது.

 

வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் நீண்ட நாட்களாக டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக இருந்து வருகின்றனர். ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓப்பனிங் செய்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link