அழகுக்கு பேரழகு சேர்க்கும் இதுவொரு அழகிய நகைக்காலம்!

Wed, 27 Oct 2021-2:44 pm,

தீபாவளி பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் வட இந்தியாவில் உண்டு அதற்கான காரணம் தெரியுமா? 

புராணங்களின்படி, ஹிமா என்ற அரசனின் மகனை கடிக்க வந்த பாம்பு, வீட்டு வாசலில் குவிக்கப்பட்டிருந்த தங்கக் குவியலால் திசைதிரும்பியது. இளவரசன் காப்பாற்றப்பட்டார். குடும்பத்தினருக்கு நிம்மதி ஏற்பட்டது.

தங்கம், இது முதலீடுகளில் முதலிடம் வகிக்கும் உலோகம்…

நகைகளின் வடிவமைப்பும், வண்ணமும் காலத்திற்கேற்றாற் போல மாறிக் கொண்டே இருக்கின்றன… இதுவொரு நவீன பொற்காலம், பொன் காலம்… பொன்னகைக் காலம்….

இது நகை வடிவமைப்பின் உச்சத்தை காணும் கனாக்காலம்… மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இங்கே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது சொக்கத்தங்கத்தில் செம்பு கலந்து உருவாக்கப்பட்ட அசல் தங்க நகை…

நவீன கவர்ச்சியான பொன்னாபரணம், பார்ப்பவரை பரவசமாக்கும்… பார்த்த விழி பூத்தபடி பூத்துக்கிடக்கச் செய்யும் தங்க நகைக் காலம்… உங்கள் ஸ்டைலுக்கு ஏற்ற ஒயிலான நகைகள் இவை… நகை எடு… தீபாவளியைக் கொண்டாடு… என்ற புதுமொழியை உருவாக்கும் டிசைன்கள்…

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link