தை அமவாசை 2025: ‘இந்த’ 6 பொருட்களை மறந்தும் வாங்கிடாதீங்க!! முன்னோர்களுக்கு கோபம் வந்துரும்..

Wed, 29 Jan 2025-10:24 am,
தை அமாவாசை 2025

தை அமாவாசை நாளில், எந்தெந்த பொருட்களை வாங்கலாம், எதை வாங்க கூடாது என்பது குறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.

பூஜை பொருட்கள்

தை அமாவாசை நாளில் முதலில் முன்னோர்களை வணங்கி பின்புதான் பிற தெய்வங்களை வணங்க வேண்டுமாம். எனவே, இந்த நாளில் பூஜைக்கு தேவையான பொருட்களான மலர்கள், ஊதுவத்திகள் உள்ளிட்டவற்றை வாங்குவது, எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் எனக்கூறப்படுகிறது.

உப்பு

மகாலட்சுமி வசிக்கும் பொருட்களுள் ஒன்று, உப்பு. அதிலும் கல் உப்பு மங்கலத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால், தை அமாவாசை நாளில் நாம் கல் உப்பு வாங்கினால் அது மகாலட்சுமியை கோபப்படுத்தும் எனக்கூறப்படுகிறது. 

அமாவாசை நாட்களில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய் வாங்குவதையோ அல்லது எண்ணெய் தேய்த்து குளிப்பதையோ தவிர்க்க வேண்டுமாம். இதனால் சனி தோஷம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

அமாவாசை நாட்களில் அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டுமாம். இந்த நாளில் நாம் என்ன வாங்குகிறோமோ, அவை அனைத்தும் முன்னோர்களுக்கு சேர்ந்ததாக அர்த்தமாம். எனவே, கோதுமை மற்றும் தானியங்களை வாங்கினால் அதை அவர்களுக்கு படைத்தது போல ஆகிவிடுமாம். இதனால் முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாகி பல கடினமான தருணங்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம்.

தெய்வ விக்ரகங்கள் வைத்து பூஜை செய்யும் வீட்டில், மது, அசைவம் போன்ற பொருட்களை அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய நாட்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் துன்பங்கள் இரட்டிப்பாவதுடன் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என்றும் கூறாப்படுகிறது.

தை அமாவாசை என்பது முன்னோர்களை மட்டும் வழிபடும் நாள் கிடையாது. இந்த நாளில், சனி பகவானையும் நாம் வழிபடலாம். எனவே, இந்த நாளில் மகாலட்சுமியுடன் தொடர்புடையை துடைப்பத்தை வாங்கி வீட்டில் வைக்க கூடாதாம். இதனால், மகாலட்சுமியின் கோபத்திற்கு நீங்கள் ஆளாவதுடன் இதனால் வருமானம் தடைபடவும் வாய்ப்புகள் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link