கனவில் தெய்வ தரிசனம்.. அதற்கான பலன் என்ன..!

Sun, 17 Oct 2021-7:14 pm,

சிவலிங்கத்தை கனவில் பார்த்தால், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று அர்த்தம். இதனுடன், உங்களுக்கு நிறைய பணம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் மறுபுறம், சிவனின் உண்மையான வடிவத்தைப் பார்ப்பது நல்ல காலம் வருவதற்கான அறிகுறியாகும்.

துர்கா கனவில் சிவப்பு உடையில் தோன்றினால் அது சுபகாரியம் வரப்போவதை உணர்த்துகிறது. குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ஒரு கனவு இது. 

பகவான் ராமர் கனவில் தோன்றினால், உங்கள் பொறுப்பு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். அத்தகைய கனவு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

பகவான் கிருஷ்ணர் கனவில் காணப்பட்டால், அது உங்கள் வாழ்க்கையில் காதல் பூக்கள் மலர்ந்ததற்கான அறிகுறியாகும். இது வெற்றியின் அடையாளத்தையும் தருகிறது.

செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தாமரையின் மீது அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியைக் கனவில் கண்டால், அந்த நபருக்கு செல்வம் கொழிக்கும், பணம் வரவு அதிகரிக்கும். 

(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link