Lord Ram: இந்த முஸ்லீம் நாட்டில் கடவுள் ராமருக்கு அதிக பக்தர்கள் இருக்கும் காரணம் இதுவே!
![ராமர் பக்தர்கள் Rama devotees](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/11/24/204206-ayodhya.jpg?im=FitAndFill=(500,286))
இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இருந்தாலும், இந்தோனேசியாவின் பெரும்பாலான மக்கள் ராமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்
![ராமாயணம் Ramayana alias Kakawin Ramayana](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/11/24/204205-rama.jpg?im=FitAndFill=(500,286))
இந்தோனேசியாவின் பெரும்பாலான மக்கள் ராமாயணத்தை தங்கள் இதயத்திற்கு நெருக்கமானதாக கருதுகின்றனர். இங்கு ராமரின் கதை காகவின் ராமாயணம் (Kakawin Ramayana) ராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. ராமாயணத்தை எழுதியவர் யோகேஷ்வர் கவிஞர் என்பது இந்தோனேஷியாவின் நம்பிக்கை. இந்நாட்டு ராமாயணத்தில் 26 அத்தியாயங்கள் உள்ளன.
![இந்தோனேசியாவின் ராமாயணம் birth of Rama](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/11/24/204204-indo-india.jpg?im=FitAndFill=(500,286))
இந்தோனேசியாவின் ராமாயணம் ராமரின் பிறப்புடன் தொடங்குகிறது. காகவின் ராமாயணத்தில், ராமரின் தந்தையின் பெயர் தசரதன் அல்ல, விஸ்வரஞ்சன். இந்தோனேசியாவின் ராமாயணம் பகவான் ராமர் பிறந்தவுடன் தொடங்குகிறது.
சுமார் 23 கோடி முஸ்லிம்கள் வசிக்கும் இந்தோனேசியாவில், அந்நாட்டு அரசு 1973-ம் ஆண்டு சர்வதேச ராமாயண மாநாட்டை நடத்தியது. முஸ்லிம் நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட ஒரு நாடு, வேறொரு மதத்தின் புனித நூலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலகில் முதல் முறையாக பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு இந்தோனேசியா ஏற்பாடு செய்தது, .
இந்தோனேசியாவின் ராமாயணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு சிறப்பு வேறுபாடு உள்ளது, இந்தியாவில் அயோத்தியில் ராமர் பிறந்தார், இந்தோனேசியாவில் ராமர் பிறந்த நகரம் 'யோக்யா' என்று அழைக்கப்படுகிறது.