உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு சேர்க்கும் செல்ல பிராணிகள் ..!!

Wed, 30 Mar 2022-4:52 pm,

பைரவரின் வேலைக்காரனாக நாய் கருதப்படுகிறது. நாயை வளர்ப்பதன் மூலம் லட்சுமி தேவி வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பண வரவு உண்டாகும் வழி திறக்கிறது. இது தவிர, நாய் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும் நெருக்கடியையும் தானே எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

வீட்டில் மீன் வளர்ப்பது மங்களகரமானது. மீன் வளர்ப்பதன் மூலம் வீட்டின் வறுமை நீங்கும். இதனுடன், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படும். தங்க நிற மீன்களை வளர்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

குதிரை வளர்த்தால் அதிர்ஷ்டம் பெருகும். குதிரை மிகவும் கடினமாக உழைக்கும் என்பதோடு, மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு. குதிரையை வலர்க்க முடியாவிட்டால், குறைந்தது ஒரு குதிரையின் படம் அல்லது சிலையை வைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

ஆமையும்  அதிர்ஷ்டம் கொடுக்கும். ஆமை வீட்டில் தங்கினால் அனைத்து வேலைகளும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் வீட்டில் அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும்.

முயல் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. ஒரு முயல் வளர்ப்பதன் மூலம், வீட்டின் எதிர்மறை ஆற்றல் நீக்கும். அதை வளர்ப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link