இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!

Tue, 30 Jan 2024-6:11 pm,

நாம் எந்த உணவை சாப்பிட்டாலும், நமது உடல் அதை குளுக்கோஸாக மாற்றுகிறது. இதனால் உடல் செல்கள் அதை ஆற்றலாகப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற செல்களுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. உடல் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்தாலோ அல்லது இல்லாமலோ இருந்தால், குளுக்கோஸ் அதை அடையாது. இதனால் உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிக பசி மற்றும் சோர்வான உணர்வு ஏற்படுகின்றது.

ஒரு சாதாரண நபர் 24 மணி நேரத்தில் 4 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பார். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். பொதுவாக, சிறுநீரகத்தின் வழியாக குளுக்கோஸ் செல்லும் போது, ​​உடல் அதை உறிஞ்சிவிடும். ஆனால் சர்க்கரை நோயால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ​​சிறுநீரகங்களால் அந்த குளுக்கோஸை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாக உடல் அதிக அளவு சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதனால் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வருகிறது. அதிக சிறுநீர் கழிப்பதால், தாகமும் அதிகமாக இருக்கும். பிறகு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

உங்கள் உடல் சிறுநீர் தயாரிக்க திரவத்தைப் பயன்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலின் மற்ற செயல்பாடுகளுக்கு மாய்ஸ்சரைசர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் நீரிழப்புக்கு ஆளாகி, வாயில் வறட்சி ஏற்படுகின்றது. வறண்ட சருமம் காரணமாக தோல் அரிப்பு தொடங்குகிறது.

மங்கலான பார்வையும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாகும். உடலில் திரவ அளவில் ஏற்படும் மாற்றத்தால் கண்களின் லென்ஸின் வீக்கம் ஏற்படலாம். இதன் காரணமாக, லென்ஸ்களின் வடிவம் மாறுகிறது. இதனால் கண்களுக்கு கவனம் செலுத்துவதில் சிரமம் ஏர்படுகின்றது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். ஈஸ்ட் குளுக்கோஸில் செழிக்கிறது. அதிக குளுக்கோஸ் இருக்கும்போது அவை வேகமாக வளரும். ஈஸ்ட் தொற்று தோல் மற்றும் மூட்டுகளில் சூடான மற்றும் ஈரமான பகுதிகளில் ஏற்படுகிறது. உடலில் இந்த இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது-விரல்கள் மற்றும் கட்டைவிரல் இடையே, மார்பகத்தின் கீழ், பிறப்புறுப்புகள் மற்றும் அவற்றை சுற்றி

நீடித்த உயர் குளுக்கோஸ் அளவுகள் இரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன. இதன் காரணமாக, நரம்புகள் சேதமடைகின்றன. ஆகையால் காயங்கள் ஆறுவதில் அதிக நேரம் எடுக்கின்றது. நரம்புகள் பாதிக்கப்படுவதால் கால்களில் வலி அல்லது உணர்வின்மை பிரச்சினையும் ஏற்படுகிறது.

உங்கள் உடலால் உணவில் இருந்து ஆற்றலை உருவாக்க முடியவில்லை என்றால், அது தசைகள் மற்றும் உடல் கொழுப்பிலிருந்து ஆற்றலை உருவாக்கத் தொடங்குகிறது. டைப்-1 நீரிழிவு நோயால், உங்கள் உணவுப் பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யாவிட்டாலும் உங்கள் எடை குறையத் தொடங்குகிறது.

உடல் கொழுப்பை எரிப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்கும் போது, ​​அது கீட்டோன்களை உருவாக்குகிறது. இந்தச் செயல்பாட்டில் கீட்டோன்கள் உங்கள் இரத்தத்தில் ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கின்றன. இந்த உயிருக்கு ஆபத்தான நிலை நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link