இந்தியாவின் டாப் 5 பணக்கார பெண்கள்!

Mon, 23 May 2022-1:13 pm,

 ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்மணி ஆவார், இவரது தந்தை ஷிவ் நாடாருக்கு பிறகு ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ரூ.36,800 கோடி சொத்து மதிப்புடன் இவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்மணியாக திகழ்ந்து வருகிறார்.

ஸ்மிதா வி கிருஷ்ணா ரூ.31,400 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார். இவர் கோத்ரெஜ் பேரரசின் மூன்றாம் தலைமுறை வாரிசாவார். இவர் சமீபத்தில் தெற்கு மும்பையில் உள்ள மெஹ்ராங்கிர் என்கிற பங்களாவை ரூ.372 கோடிக்கு வாங்கியுள்ளார்.

கிரண் நாடார் ரூ.25,100 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார். இவர் ஷிவ் நாடாரின் மனைவி மற்றும் ரோஷினி நாடாரின் தாயார் ஆவார்

கிரண் மஜூம்தார் ஷா ரூ.18,500 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் நான்காவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார். பயோகானின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கிறார், மேலும் இவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றுள்ளார்.

தேஷ்பந்து குப்தாவின் மனைவி மஞ்சு தேஷ்பந்து குப்தா லூபினின் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கிறார். ரூ.18,000 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link