சுகர் லெவலை சிம்பிளா குறைக்க உதவும் காய்கள்: தினமும் சாப்பிடுங்க

Tue, 24 Sep 2024-12:33 pm,

நீரிழிவு நோயாளிகள் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தினசரி உணவில் சில குறிப்பிட்ட காய்களை சேர்த்துக்கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும் காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள நிம்பின் என்ற தனிமம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது இதை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது மிக நல்லது.

 

சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும். சுரைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இந்த சாறு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பூசணிக்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பூசணியின் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. அதாவது இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கிறது. சுகர் நோயாளிகள் இதை தினமும் உட்கொள்லலாம்.

கத்தரிக்காயில் நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. கத்தரிக்காய் இரத்த சர்க்கரை அளவை படிப்படியாக அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி எடை இழப்பிலும் கத்திரிக்காய் உதவுகின்றது. கத்தரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து வீக்கத்தைக் குறைக்கின்றன.

கீரையில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் ரெசிஸ்டன்சையும் குறைக்க உதவுகிறது. கீரை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இது வேகமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. 

நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும் காய்களில் பீர்க்கங்காயும் ஒன்று. இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகமாக உள்ளன.. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

வெந்தயம், வெந்தயக் கீரை, வெந்தய பொடி என அனைத்தும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதை சூப் செய்தும் குடிக்கலாம்.

இந்த காய்கறிகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு கண்டிப்பாக இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனினும், அவ்வப்போது இரத்த ச்சர்க்கரை அளவை பரிசோதித்து மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று  அவர் அளிக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link